அத்துடன், சன
நெரிசல் அதிகமாகவுள்ள பகுதிகளில் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை
என்ற தமது வாக்குறுதியை மீறும் வகையில் தொடச்சியாக ஆட்டிலறி
எறிகணைகளையும், கொத்துக்குண்டுகளையும் சிறிலங்கா
படையினர் பயன்படுத்தியதால் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டன.
இவ்வாறான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதை உறுதி செய்யும்
செய்மதி ஒளிப்படங்கள் தம்வசம் இருப்பதாக ஐக்கிய நாடுகள்
சபை அறிவித்திருந்தது.
அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா தலைமையிலான துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி.,
த.சித்தார்த்தன் தலைமையில் செயற்படும் மற்றொரு துணை
இராணுவக் குழுவான புளொட் என்பவற்றுடன் அமைச்சர்
முரளிதரன் தலைமையில் செயற்படும் துணை இராணுவக் குழு போன்றவற்றுக்கு
வவுனியாவில் இருக்கின்ற இந்த இடைத்தங்கல் தங்குதடையின்றி
போய் வருவதற்கான அனுமதியை இராணுவம் வழங்கப்படுகின்றது
என்றும் இந்த அமைப்பு கூறியுள்ளது.
இலங்கையில் நடந்த
போரில் சிங்களர்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை
சுட்டுக்கொன்று விட்டதாக சொல்கிறார்கள். இதை நாங்கள்
நம்பமாட்டோம். பிரபாகரன் இலங்கை தமிழர்களின் கடவுள்.
அந்த கடவுளுக்கு மரணமே கிடையாது. காரணம் என்னைப் போன்ற
பெண்கள் இலங்கை மண்ணில் பாதுகாப்பாக வாழ வழி ஏற்படுத்தியது
அவர்தான்.
பெருமளவிலான மக்களின்
உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் பதுங்குகுழிகளுக்குள்ளும்
கூடாரங்களிலும் காணப்படுகின்றன. காயமடைந்தவர்களில் பலர்
காயங்களுடன் தரையில் கிடந்தவாறு தங்களைக் காப்பாற்றுமாறு
அவலக்குரல் எழுப்புவதாகவும் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.