HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine      Contact.....21-11-2008                 Home

உலக செய்திகளின் சங்கமம்

மேலதிக செய்திகளுக்கு

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Your Ad Here

---------------------------------------------------------------------------------------------------------

21-11-2008

தமிழக அரசுக்கு விஜயகாந்த் கேள்வி

மின் பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறைய, மின் உச்சத்தேவையை நிர்வகிக்க, தமிழக அரசு உருப்படியான நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது என்பதை விளக்க வேண்டும்' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.விஜயகாந்த் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் என்றும் இல்லாத அளவுக்கு இன்று மின்சார நெருக்கடி ஏற் பட்டுள் ளது. இந்த நிலை யை எப்படி சமாளிப்பது என்று அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒன்றும்

குடாநாட்டுக்கு அடுத்த மாதம் முதல் 24 மணிநேரமும் மின்சார விநியோகம்'

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மின்வலு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ஐ.தே.க. ஆரம்பித்த நுரைச்சோலை அனல்மின் நிலையத் திட்டத்தைத் தான் நாம் தற்போது நடைமுறைப்படுத்துகின்றோம். அவர்களால் செய்ய முடியாததை நாம் செய்யும்போது குற்றஞ்சாட்டுகின்றனர்.

கிளாலி, முகமாலை பகுதிகளில் 250 படையினர் பலி! ஐ.தே.க அறிவிப்பு

வடபோர் முனை கிளாலி, முகமாலைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் 250 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என பிராதான எதிர்க்கட்சியான ஐ.தே.க தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறீ ஜயசேகர தெரிவிக்கையில்:-

 

20-11-2008

அட்டகாசம் செய்த கொள்ளையர் கப்பல் மூழ்கடிப்பு : இந்திய கடற்படை அதிரடி நடவடிக்கை

கடத்தப்பட்ட கப்பலை விடுவிப்பதற்கு கொள்ளையர்கள் கோடிக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தும் வந்தனர். சமீபத்தில், ஜப்பான் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பலையும், அதில் சென்ற இந்திய கப்பல் ஊழியர்கள் 18 பேரையும், கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். கோடிக் கணக்கில் பணம் கொடுத்த பிறகு ஊழியர்களையும், கப்பலையும் விடுவித்தனர். இப்பகுதியில், தற்போது சவுதிக்குச் சொந்தமான,

நம்பியார் மறைவு சில நினைவுகள்

கேரளா மாநிலம் மலப்புரத்தை அடுத்த மஞ்சேரி என்ற ஊரில் 1919-ம் ஆண்டு மார்ச் மாதம் 7ந் தேதி பிறந்தவர். இவரது இயற்பெயர் நாராயணன் நம்பியார். ஊர்ப்பெயரையும் சேர்த்து எம்.என்.நம்பியார்(மஞ்சரி நாராயணன் நம்பியார்) என்று அழைக்கப்பட்டு வந்தார்.தனது 8 வது வயதில் நம்பியார் ஊட்டியில் டீ கடை நடத்தி வந்த தனது சகோதரியின் கணவர் வீட்டுக்கு வந்தார். அங்கேயே பள்ளிக்கூடத்தில் சேர்ந்து 5வது வகுப்பு வரை படித்தார்.

தமிழர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் சிங்கள காவற்துறையினர்!

நாட்டின் அசாதார சூழ் நிலைமை காரணமாக இடம் பெயர்ந்த நிலையில் கொழும்பிலும் மற்றும் புறநகர்ப்குதிகளிலும் தற்காலிமாக தங்கிவாழும் தமிழர்களிடம் சிங்களக் காவற்துறையினர் பண வசூலிப்பில் இறங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.சுற்றி வளைப்புத் தேடுதல் என்ற போர்வையில் புறக்கோட்டை, வெள்ளவத்தை மற்றும், தெகிவளை மற்றும் அதனை அண்டிய பிரதேச லொட்ஜ்களில் தங்கியிருக்கும் தமிழர்களிடம் பொலிஸ் குழுவொன்றும் பணம் பறித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

போரில் மகிந்த ராஜபக்சவினால் வெற்றி பெற முடியாது - உண்ணாநிலைப் போராட்டத்தில் வைகோ

இலங்கையில் போரை நிறுத்தக் கோரி வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையி்ல் உண்ணா நிலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இன்று புதன்கிழமை சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை முன்பாக உண்ணா நிலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உண்ணா நிலைப் பேராட்டத்தை  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் ஆரம்பித்து வைத்தார்.

 

 

19-11-2008

நம்பியார் மறைந்தார் -திரையுலகம் அஞ்சலி

தமிழ் திரையுலத்தால் நம்பியார் சாமி என்று அழைக்கப்படும் இவர், தமிழகத்தில் ஐயப்பன் சுவாமியை அறிமுகப்படுத்தியவர் என்றே சொல்லலாம். ரஜினி உள்ளிட்ட பல்வேறு விவிஐபி களை கேரளாவில் உள்ள ஐயப்பன் சன்னதிக்கு அழைத்துச் சென்றவர். நவாப் ராசமாணிக்கம் என்பவர் ஐயப்பன் புகழை பரப்பும் விதத்தில் நாடகங்கள் நடத்திக் கொண்டிருந்த போது அவரது நாடகக் குழுவில் நடிக்க சென்றவர்

தற்போதைய சூழ்நிலையில் போரை நிறுத்துவதற்கான வாய்ப்பு இல்லை

இலங்கையின் நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்பதே எமது விருப்பம். இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் நாங்கள் தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ளவே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்திக்க நேரம் ஒதுக்கித்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்' என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கி கணக்குகளில் உள்ள நிதி அரசுடைமையாக்கப்பட்டுள்ளது

இலங்கையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் வங்கி கணக்குகளில் உள்ள நிதி அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரில் உள்ள வங்கி கணக்குகளில் இருந்த 71 மில்லியன் ரூபா அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள் மோதல்களில் 200 படையினர் பலி; 300-க்கும் அதிகமானோர் படுகாயம்: கொழும்பு ஊடகம

முகமாலை, மாங்குளம் மற்றும் கிளிநொச்சிக்கு தென்புறம் உள்ள பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக  கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. முன்நகரும் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.படைத்தரப்பில் பல நூறு பேர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர். இதில் முகமாலை மற்றும் மாங்குளம் களமுனைகளில் படைத்தரப்பு நேற்று கடும் இழப்புக்களை சந்தித்துள்ளது.

 

18-11-2008

ஒசாமாவைப் பிடிப்பது லட்சியம்: ஒபாமா சவால்

இதற்காக, ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தான் அனுப்ப திட்டமிட்டுள்ளேன். எனது தேர்தல் பிரசாரத்தின்போது, அளித்த உறுதிமொழிப்படி ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை திரும்ப அழைப்பேன். இது உடனடியாக நடக்கும். இது தொடர்பாக, படை தளபதிகளையும், எனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் கலந்து

அரசியல் தீர்வுக்கு அழுத்தம் கொடுக்க புலிகளைத் தவிர வேறு எவருமில்லை

ஆயுதக் குழுக்களுடன் இணைந்து கொண்டு வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்வதாக ஜனாதிபதி கூறுவது நகைப்புக்கிடமானது. தமிழ் மக்களின் அபிலாஷைகள், அரசியல் ஜனநாயக உரிமைகள் போன்ற விடயங்கள் பல தசாப்தங்களாக பல பிரச்சினைகளைக் கொண்டு மூடி மறைக்கப்பட்டுள்ளது. இதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புரிந்துகொள்ள வேண்டும்.

மலேசியாவில் சிறிலங்கா தூதரகம் முன்பாக கண்டனப் பேரணி: 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு

மலேசிய அரசியல் கட்சிகளான அம்னோ, மலேசியன் இந்தியன் காங்கிரஸ், மலேசிய சீனர் சங்க உறுப்பினர்கள்.அரச சார்பற்ற இயக்கங்களான உலகத் தமிழர் நிவாரண நிதியம், தமிழ் நெறி கழகம், தமிழ் அறவாரியம், உலகத் தமிழர் மாமன்றம், தமிழ் இளைஞர் மணி மன்றம், மலேசிய இந்திய இளைஞர் மன்றம், இந்து சங்கம், இந்து இளைஞர் இயக்கம் என பலதரப்பட்ட அமைப்புகளைச் சார்ந்த தமிழ் மக்கள் அணிதிரண்டு வந்து கண்டனப் பேரணியில் பங்கேற்றனர்.ஈழத் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்த வேண்டும்

பூநகரி மோதல்களில் 8 அதிகாரிகள் உட்பட 54 படையினர் பலி; 350 பேர் காயம்: முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர

பூநகரியை வல்வளைத்த படையினரின் நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தினர்.இதில் படையினர் பலத்த இழப்புக்களை சந்தித்தனர்.பூநகரி பகுதியில் கடைசி ஒருநாள் நடைபெற்ற மோதல்களில் எட்டு அதிகாரிகள் உட்பட 54 படையினர் கொல்லப்பட்டனர். 350 படையினர் காயமடைந்தனர் என்று மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

வடபோர்முனையில் சிறிலங்கா படையினரின் மும்முனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 10 படையினர் பலி; 40 பேர் காயம்

கிளாலி, முகமாலை, கண்டல் பகுதிகள் ஊடாக இன்று திங்கட்கிழமை காலை 5:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினரின் 53, 55 ஆம் டிவிசன் படையணிகள் மும்முனைகளில் முன்நகர்வுகளை மேற்கொண்டனர்.படையினரின் பின்தளங்களில் இருந்து செறிவான பல்குழல் வெடிகணை, ஆட்லெறி எறிகணை மற்றும் கனரக போர்க்கலங்களின் செறிவான சூட்டாதரவுடன் முன்நகர்வினை படையினர் மேற்கொண்டனர். 

போரை நிறுத்து....சூர்யா, கார்த்தி மனிதசங்கிலி

இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை கண்டித்தும், அங்கே நடைபெறும் ராணுவ தாக்குதலை நிறுத்த வலியுறுத்தியும் தமிழகத்தில் நடைபெறும் தொடர் போராட்டங்களில் திரையுலகமும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. அரசியல்வாதிகளே கூட இந்த பிரச்சனைக்காக சிறைக்கு போகாத நிலையில், திரையுலகத்தை சீமானும், அமீரும் சிறைசென்ற சம்பவமும் நடைபெற்றது. இன்னமும் மதுரையில் இருந்து சென்னைக்கு வர இயலாத சூழலில் இருக்கிறார்கள் இருவரும்.

 

 

மேலதிக செய்திகளுக்கு இங்கே அழுத்தவும்

                                              [C] Copyright www.Htn-news.com 2004-2008        Contact

::Welcome to Globe7