www.Htn-News.com    dA Tamil E-Magazine       Contact ..... Updated 04-01-2009

 

   Your Ad Here

      Vote for HTN-Tamil news

30-12-2008

அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரை வழிமறித்து விடுதலைப் புலிகள் தாக்குதல்: இருவர் பலி

அம்பாறை மாவட்டம் பொத்துவில் தொடக்கம் யால வரையிலான வனப்பகுதிக்குள் தேடுதல் நடவடிக்கைக்காக நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.இவர்களின் இரு அணிகளை இன்று காலை 7:40 நிமிடத்துக்கும் பின்னர் 8:25 நிமிடத்துக்குமாக இரு தடவைகள் உகந்தை வனப் பகுதிக்குள் விடுதலைப் புலிகள் வழிமறித்து தாக்கினர்.

இரணைமடு தாக்குதலில் டாங்கியை பயன்படுத்திய புலிகள்

இரணைமடு பகுதியில் கடந்த 20 ஆம் நாள் விடுதலைப் புலிகள் நடத்திய வலிந்த தாக்குதலின் போது ரி-55 ரக டாங்கியை பயன்படுத்தியுள்ளனர். இரணைமடுவின் வடக்குப் பகுதியில் 57-4 ஆவது பிரிகேட்டின் இரு பற்றலியன்கள் நிலைகொண்டிருந்தன. இவர்களின் பாதுகாப்பு நிலைகள் மீது விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் வலிந்த தாக்குதலை நடத்தினர்.

 

போரில் நாம் வெற்றிகளைக் குவித்தால்- உதவிகள் தருவதற்கு வெளிநாடுகள் தேடி வரும் நிலை வரும்: கேணல் பானு

நாம் எமது மக்களுக்கு எதிரி தரும் அவலங்களை திருப்பிக்கொடுக்க வேண்டும். இன்று சிறிலங்கா பெரும் நெருக்கடிக்குள் இருக்கின்றது. அது பெரும் பொருண்மிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இன்னும் பெரும் பொருண்மிய உடைவு அவர்களுக்கு ஏற்படவுள்ளது. உறுதியாக நாம் வெல்லுவோம் எனவும் கேணல் பானு தெரிவித்துள்ளார்.

 

 

 

29-12-2008

சிறிலங்கா படையினரின் 17 உடலங்களும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பில் இன்று திங்கட்கிழமை காலை 10:00 மணியளவில் இக்கையளிப்பு நிகழ்வு நடைபெற்றது.விடுதலைப் புலிகளின் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான செயலகப் பணிப்பாளர் மு.பாவரசனினால் செஞ்சிலுவைச் சங்கத்தின் வன்னிக்கான வதிவிடப் பிரதிநிதி யூலியனிடம் படையினரின் 17 உடலங்களும் கையளிக்கப்பட்டன.

வடபோர்முனையில் சில நாட்களிலேயே 500 படையினர் பலி: ரணில்

சிறிலங்கா படைத்தரப்பில் கடந்த சில நாட்களில் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதே எண்ணிக்கையில் படுகாயங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கான உரிய சிகிச்சைகளை மகிந்த அரசு வழங்கவில்லை. இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கின்றன.எமது ஆட்சிக்காலத்தில் 12 வானூர்திகள் இருந்தன. ஆனால் இவற்றில் 2 வானூர்திகளே இப்போது இயக்கப்படுகின்றன.

 

சிறிலங்காவுக்கு பாகிஸ்தானிடமிருந்து மாதத்துக்கு மூன்று முறை இராணுவத்தளபாடங்கள் - சிவாஜி

இலங்கைக்கு தேவையான  வெடிகுண்டுகளும், வெடிமருந்துகளும் பாகிஸ்தானில் இருந்துதான் வருகிறது. இதற்கு தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றது'' என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.ஜப்பானில் குரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட குண்டுகளை விட

 

 

 

28-12-2008

இலங்கையில் தினமும் தமிழன் சாகிறான் தி.மு.க., பொதுக்குழுவில் கருணாநிதி உருக்கம்! வேதனை

இலங்கை பிரச்னைக்காக ஏற்கனவே பதவியைத் துறந்தோம். இலங்கைத் தமிழன் வாழ, உயிர் துறக்க வேண்டுமானால் அதற்கும் தயாராக இருக்கிறோம். இதன் பிறகாவது மத்திய அரசு மனமிரங்கி தமிழர்களைக் காப்பாற்ற முன்வர வேண்டும்,'' என்று தி.மு.க., பொதுக்குழுவில் முதல்வர் கருணாநிதி உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.சென்னையில் நேற்று நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், 10வது முறையாக தி.மு.க., தலைவராக கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார்.

முல்லைத்தீவை நோக்கிய சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 68 படையினர் பலி; 75 பேர் காயம்; 17 உடலங்கள் மீட்பு

முல்லைத்தீவை நோக்கிய சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 68 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 17 உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பின் புறநகர்ப் பகுதியில் படையினரின் முகாம் மீது குண்டுத் தாக்குதல்: இராணுவ அதிகாரி உட்பட 8 பேர் பலி; 10 படையினர் உட்பட 19 போ் காயம்

இதில் இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட  படையினரில் ஆறு பேரும் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவரும் பொதுமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்தவர்களில் 10 பேர் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய 9 பேரும் பொதுமக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கனவில் தடுமாறும் அரசு - சி.இதயச்சந்திரன்

விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தமோ அல்லது பேச்சுவார்த்தையோ ஏற்பட வேண்டுமென்ற கருத்து நிலையோடு சர்வதேச நாடுகள் சில, இருப்பதாகக் கருதும் அரசு, அதற்கான எதிர்கால களச் சூழல் உருவாகாமல் தடுக்க, முன்கூட்டியே விடுதலைப் புலிகளைத் தடை செய்யும் உத்தியை கையாள முயல்வது போல் தெரிகிறது. 

 

 

 

  Home                                     [C] Copyright www.Htn-news.com 2004-2008        Contact

::Welcome to Globe7