|
|
|
அன்னாசிப்பழ
பொங்கல்
தேவையானப் பொருட்கள்
-
மிகவும் பொடியாக நறுக்கப்பட்ட அன்னாசிப்பழம்
- 1 கப்
-
பச்சரிசி - 2 கப்
-
சீனி - 1 கப்
-
திராட்சை - அரை கப்
-
முந்திரிப்பருப்பு - கால் கப்
-
பால் - 2 கப்
-
தண்ணீர் - 4 கப்
-
தேங்காய்த்துருவல் - அரை கப்
-
ஏலப்பொடி - 1 ஸ்பூன்
-
குங்குமப்பூ - 2 சிட்டிகை
-
பைனாப்பிள் எஸென்ஸ் - 1 ஸ்பூன்
-
உப்பு - 1 சிட்டிகை
-
நெய் - கால் கப்
|
செய்முறை
-
பாலையும் தண்ணீரையும் சேர்த்து ஒரு
பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து
சூடாக்கவும்.
-
கொதி வந்ததும் அரிசியைச் சேர்த்து குங்குமப்பூவும்
சேர்த்து சிறு தீயில் குழைய வேக வைக்கவும்.
-
தனியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில்
வைத்து சூடாக்கி நெய்யை ஊற்றவும்.
-
திராட்சை, முந்திரிப்பருப்பு, தேங்காய்த்
துருவல்-இவைகளை ஒவ்வொன்றாய் பொன்னிறமாக
வறுத்தெடுக்கவும்.
-
அதே வாணலியில் அன்னாசிப்பழத்துண்டுகளைப்
போட்டு சிறிது நீர் சேர்த்து அவை நன்கு
வெந்ததும் சீனியைச் சேர்த்து கெட்டியானதும்
இதை சாதம் நன்கு குழைந்து வெந்து வரும்போது
அதனுடன் சேர்க்கவும்.
-
உப்பு, ஏலப்பொடி, எஸென்ஸ், வறுத்த
பொருட்களைச் சேர்க்கவும். சிறுதீயில்
வைத்து கிளறவும்.
-
எல்லாம் ஒன்று சேர்ந்து வந்ததும்,
தேவையானால் சிறிது நெய்யை ஊற்றிக்
கிளறி இறக்கவும்.
|
|
|
|
|
|
|
|
 |
|
|
|
|