|
|
|

HTN health news
கசப்பு அமுதம்
பாகற்காயின் கசப்புச் சுவைக்கு பயந்தே பலர் அதை ஒதுக்கி
விடுகிறhர்கள். ஆனால் கசப்புத் தன்மை அவர்கள் நினைப்பது
போல விஷம் அல்லது. மாறhக அமுதத்துக்கு சமமானது. நம்முடைய
உடம்பு தனக்கு வேண்டிய அளவு இந்தச் சத்தை உறிஞ்சிக்
கொண்டு எஞ்சியவற்றை கழிவுப் பொருட் களாக வெளித் தள்ளிவிடும்.
பாகற்காய் சூடு உண்டாக்கும். கொம்பு பாகற்காய், மிதி
பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இரண்டுமே கறி சமைத்து
உண்ணக் கூடியவை. இது கசப்புள்ளதாக இருந்தாலும் பருப்பு,
தேங்காய் முதலியவற்றைச் சேர்த்து சமைத்தால் உண்பதற்கு
சுவையாக இருக்கும்.
இது உணவுப்பையில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். பசியைத்
தூண்டும். பித்தத்தை தணிக்கும். மலத்தை இளக்கும். பெண்களுக்கு
பாலைக் கொடுக்கும். இதனுடன் சிறிது புளி சேர்த்துக்
கொண்டால் நல்லது. பாகற் காயை அவ்வப்போது சேர்த்துக்
கொண்டால் ஜூரம், இருமல், இரைப்பை, மூலம், வயிற்றுப்புழு
ஆகியவை அகலும்.
பாகற்காய் எளிதில் ஜPரணமாகாது என்றhலும் ஜடாராக்
கினியை ஊக்குவிக்கும். கபம், பித்தம், ரத்த தோஷம், பாண்டு,
குஷ்டம், மந்தம், காமாலை ஆகிய கொடிய நோய்களை எளிதில்
போக்குவது இதன் இயல்பாகும்.
பாகற்காய் சிறந்த உணவுப் பொருளாக மட்டுமில்லாமல் மருந்துப்
பொருளாகவும் பயன்படுகிறது. பாகற்காய் இலையின் சாறினை
ஒரு அவுன்சு சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக்
கலந்து காலை, மாலை ஆகிய இரண்டு வேளையும் உட்கொண்டால்
விஷ சுரம் நின்று விடும். இலையை அரைத்து உடம்பு
முழுவதும் தடவி 1 மணி நேரம் ஊறியபின் குளிக்க வேண்டும்.
இது போன்று 3 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நாய்க்
கடியின் விஷம் உடம்பில் ஏறhது.
பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை சிறிது உரைத்து
சிரங்கின் மேல் நல்ல தடிப்பாக தடவி வந்தால் ரத்தம் சுத்தம்
செய்யப் பெற்று சிரங்கு உதிர்ந்து விடும். பாகற் காய்
வேரை சந்தனம் போல அரைத்து நல்லெண்ணெய் - யில் குழைத்து
ஜனனேந்திhpயத்தின் உள்ளும் புறமும் தடவி வந்தால் பெண்களுக்கு
கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்குப் பின்வரும் மண்குத்தி
நோய்க்கு இது கண்கண்ட மருந்து.
கொடி பாகல் இலையுடன் 500 மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில்
அரைத்து கண்களைச் சுற்றிப் பற்று போட்டு வந்தால் மாலைக்கண்
அகலும். 2 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே சிறிது வெல்லத்தைக்
கரைத்து சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப்பூச்சிகள்
வெளியேறும். பாகல் சாற்றில் சிறிது குங்குமப் பூவை
அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த வயிறு சிறுத்து
விடும். பாகல் இலைச் சாற்றை குடிப்பதால் பாம்பு விஷம்
நீங்கும். பாகல் இலையை உலர்த்தி பீடி போல சுற்றிக் கொண்டு
அதன் புகையை உறிஞ்சினால் பல் நோய்கள் பறந்தோடி விடும்.
பாகல் இலைச் சாற்றை 1 அவுன்ஸ் எடுத்துக் கொண்டு அதில்
1_2 அவுன்ஸ் நல்லெண்ணெய் கலந்து உட் கொண்டால் காலரா
உடனே நீங்கும். 1 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவுக்கு
பெருங்காயப் பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு
நிரந்தரமாக குணம் ஆகும்.
அதுபோல 1 அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் அதே அளவு ஆட்டுப்பால்
அல்லது பசுவின் மோர் கலந்து 3 நாட்கள் காலையில் சாப்பிட்டு
வந்தால் காசநோயை மட்டுப்படுத்த முடியும்.
|
|
|