|
|
|

HTN health news
எலுமிச்சம்பழம்
அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை
அரை டம்ளர் நீhpல் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி
நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை
போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி
குடித்தால் உடனே களைப்பை போக்கும்
நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள்
ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து
காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால்
கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.
பழங்களைப் போலவே காய்கறி களும் மனிதர்களுக்கு உடல்நலக்
கோளாறுகளை தனிக்கும் வகையில்தான் உள்ளது. நோய்களை
முழுது மாக குணப்படுத்து கிறதோ இல்லையோ ஆனால் நோய்வரா
மல் தடுக்கும் ஆற்றல் காய், கனிகளுக்கு உண்டு என்பதை
மறுக்கமுடியாது. நமது முன்னோர்களும், சித்தர்களும் காய்
கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர
ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும்.
காய்கறிகள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகையான மருத்துவ
குணம் உண்டு. உடனே நீங்கள் இந்த நோய்க்கு இந்த காயை
சாப்பிட்டால் இந்தக் குறிப்பிட்ட நோய் குணமாகிவிடுமா
என்று கேள்வி கேட்கக் கூடாது.
பொதுவாக காய்கறிகளில் நார்சத்து நிரம்பியிருப்பதினால்
வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கிய முடன்
வைத்திருக்க உதவுகிறது. நீரழிவு நோயாளிகளும், ரத்த
அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம்
என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு. காய்
கறிகளில் இருக்கும் பைபர் எனப்படும் நார்சத்து வயிற்றில்
நீண்ட நேரம் தங்கி நல்ல ஜPரண சக்தியை கொடுத்து உணவில்
இருந்து சத்துக்களை பிhpத்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு
உதவி செய்கிறது. இந்த நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக
நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல் தொல்லைகள்
போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே காய்கறிகள் சாப்பிடுவது
ஆரோக்கியத்திற்கு நல்லது.
|
|
|