Home

 

                     www.Htn-news.com ........dA Tamil E-Magazine        Contact  18 11 2008    HOME    

  தமிழ் சஞ்சிகைகள்

 

வீரகேசரி
தினக்குரல்
உதயன்
மட்டக்களப்பு ஈழநாதம்
நமது ஈழநாடு
விகடன்
அம்பலம்
சுடர் ஒளி
ஈழமுரச
குமுதம்
தினகரன்
தினத்தந்தி
விடுதலை
தினபூமி
தினமணி
மாலைச்சுடர்
தினமலர்
மாலைமலர்
எரிமலை
நக்கீரன்

Your Ad Here

பூநகரி மோதல்களில் 8 அதிகாரிகள் உட்பட 54 படையினர் பலி; 350 பேர் காயம்: முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர
 
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரிப் பகுதியில் நடைபெற்ற மோதல்களில் சிறிலங்கா படையின் எட்டு அதிகாரிகள் உட்பட 54 போ் கொல்லப்பட்டுள்ளனர். 350 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது:

பூநகரியை வல்வளைத்த படையினரின் நகர்வுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தினர்.இதில் படையினர் பலத்த இழப்புக்களை சந்தித்தனர்.பூநகரி பகுதியில் கடைசி ஒருநாள் நடைபெற்ற மோதல்களில் எட்டு அதிகாரிகள் உட்பட 54 படையினர் கொல்லப்பட்டனர். 350 படையினர் காயமடைந்தனர் என்று மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் சிறிலங்காவின் படைத்துறை பேச்சாளரிடம் ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டு கேட்டபோது, படை நடவடிக்கை எனில் இழப்புக்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட முடியாதது என்று தெரிவித்துள்ளதுடன் இதனை நிராகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.