இலங்கையில் பிரித்தானியாவின்
காலனித்துவ ஆட்சிக்காலத்தில் ஏட்பட்ட இழப்புக்களுக்கான
நீதிமன்றம் செல்லப்போவதாக ஜாதிக ஹெல
உறுமயவின் மாகாண சபை உறுப்பினர்
தெரிவித்தள்ளார்.அக்காலப்பகுதியில் ஏற்பட்ட
இழப்புக்களை ஆராய்ந்து மதிப்பீடு செய்வதற்காக
குழுவொன்றையும் நியமிக்கப்படவுள்ளதாகவும்
ஜாதிக ஹெல உறுமயவின் மேல்மாகாணசபை வேட்பாளர்
உதய கம்மன்பில தெரிவித்தார்.
1866 தொடக்கம்
1948ம் ஆண்டுவரையிலான காலப்பகுதியில் இலங்கையிலுள்ள
வளங்களைச் சூறையாடியதுடன், சிங்கள மற்றும்
இந்துக் கலாச்சாரங்களைப் பின்பற்ற விடாமல்
தடுத்து கலாச்சார மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும்
குற்றஞ்சாட்டிய அவர் இனங்களுக்கிடையில்
பிரச்சினையைத் தோற்றுவித்ததுடன், நாட்டிற்கு
அவப்பெயரை ஏற்படுத்தியிருப்பதாக அவர்
கூறினார்.
அண்மையில் கோர்டன் பிரவுண் மற்றும் டேவிட்
பிலிபான்ட் ஆகியோரின் கருத்துக்கள் மீண்டும்
ஒருமுறை நாட்டை ஆக்கிரமிக்க பல்வேறு
வழிகளில் முயற்சிப்பதாக உள்ளது எனவும் அவர்
தெரிவித்தார்.