|
கண்ணி வெடி
அகற்ற இந்திய வீரர்கள் 500 பேர் இலங்கை பயணம்
கொழும்புஇ ஜூலை. 16-
இலங்கையில் போர் நடந்த பகுதிகளில் விடுதலைப்புலிகளால்
புதைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடிகள் இன்னும் அகற்றப்படாமலேயே
உள்ளன. இதனால் பொதுமக்களை அவர்கள் குடியிருந்த பகுதிக்கு
அனுப்புவதில் இலங்கை அரசு காலதாமதப்படுத்தி வருகிறது.
எனவே கண்டி வெடிகளை அகற்ற உதவி செய்யஇ தயாராக இருப்பதாக இந்தியா
அறிவித்தது. கண்ணி வெடி அகற்றும் நிபுணர்களை இங்கிருந்து
அனுப்ப தயாரானது.
இதை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டது. இதையடுத்து இந்திய வீரர்கள்
500 பேர் இலங்கை செல்ல உள்ளனர். இந்த தகவலை இலங்கை கூட்டுப்படை
தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-
இந்திய வீரர்கள் 500 பேர் வர உள்ளனர். ஆனால் அவர்கள் எப்போது
வருவார்கள் என்பதை திட்டவட்டமாக சொல்ல முடியாது.
கண்ணி வெடிகளை அகற்றும் பணிக்கு இந்திய படையினரின் உதவி
மிகவும் அவசியமானதாகும் இவற்றை அகற்றுவது என்பது எளிதான
விஷமல்ல சேற்று நீர்இ சதுப்பு நிலம்இ வயல் வெளி போன்ற இடங்களில்
இதற்கான கருவிகளை பயன்படுத்த முடியாது. அவ சரத்துக்கு ஏற்ப
பணியை செய்து விட முடியாது இதற்கு கால அவகாசம் தேவை. இருந்தாலும்
விரை வில் இந்த பணிகளை நிறை வேற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
|