|
இலங்கை கிரிக்கெட் அணி
மீதான துப்பாக்கி பிரயோகம் குறித்து ஜனாதிபதி கண்டனம்
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானில்
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானமை கண்டிக்கத்தக்கதென
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.நல்லெண்ணத் தூதுவர்களாக
பாகிஸ்தான் சென்ற இலங்கைக் கிரிக்கெட் அணியினர் மீது துப்பாக்கிப்
பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது
என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேபாளத்திற்கு
விஜயம் செய்துள்ள ஜனாதிபதி, இலங்கை வீரர்கள் துப்பாக்கிச்
சூட்டுக்கு இலக்கானதைக் கேள்வியுற்று, அவர்களைப் பாதுகாப்பாக
நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும்
அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது நேபாளத்திலுள்ள வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகமவை
உடனடியாக பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறும் ஜனாதிபதி
வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானிலுள்ள இலங்கை தூதரகத்திடமும்,
பாகிஸ்தானிய அதிகாரிகளிடமும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்
பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு உதவுமாறும் அவர் கோரியுள்ளார்
மட்டக்களப்பில் சுற்றிவளைப்பின்போது விசேட அதிரடிப்படையினரால்,
14 வயது சிறுமி தாயின் முன்னால் கதற கதற கற்பழிப்பு |